இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ள நிலையில், தொடர்ந்தும் அனைத்து மருத்துவமனைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
யாழ்ப்பாணத்திலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலைக்குச் செல்லும் நபர்களில் பலர் பரிசோதிக்கப்பட்டு மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 89 பேருக்கான கொரோனா தொற்று ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பருசோதிக்கப்பட்ட எவருக்கும் தொற்று இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர்கள் கூறுகையில்…