மன்னார்-கருங்கண்டல் பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் கூடம் வடமாகாண ஆளுனரால் திறந்து வைப்பு.

IMG 0779
IMG 0779

மன்னார்-கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் கூடம் வடமாகாண ஆளுனரால் திறந்து வைப்பு.

மடு கல்வி வலயத்திற்குற்பட்ட மன்-கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்பகூடம் நேற்று வியாழக்கிழமை(11) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


பாடசாலையின் அதிபர் ஜீ.குணசீலன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வட மாகாண ஆளுனர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த தொழில் நுட்பகூடத்தை திறந்து வைத்தார்.


இதன் போது மடு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன்,வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.