சுனில் ஜெயவர்த்தனவிற்கு யாழில் அஞ்சலி

9a2 L
9a2 L

யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட சுனில் ஜெயவர்த்தனவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை யாழ் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள முச்சக்கர வண்டிகள் சங்க தரிப்பிடத்திற்கு முன்னால் ஒன்று கூடிய முச்சக்கரவண்டி உறுப்பினர்கள் சிலர் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி சுனில் ஜெயவர்த்தனவிற்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரின் கொலையை கண்டித்தனர்.

இதேவேளை யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் தரிப்பிடத்தில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் சுனில் ஜெயவர்த்தனவின் கண்ணீர் அஞ்சலி பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.