கதிர்காமத்துக்கான பாதையாத்திரைக்கு அனுமதியளிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

00
00

இந்து மக்களாகிய எமது நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்கு கதிர்காமத்துக்கான பாதையாத்திரையை மேற்கொள்ள ஜனாதிபதி அனுமதியளிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் ஆலைய பாதயாத்திரை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் ஆலைய பாதயாத்திரை சங்கம் மாமாங்க ஆலய வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்

வருடாவருடம் கதிர்காமத்துக்கான பாதையாத்திரை மேற்கொண்டு வருகின்றோம் இந்த யாத்திரை பாரம்பெரியது ரிஷpகள். சித்தர்கள், எங்கள் மூதாதையர்களின் கால்பதித்த மண்ணாகும் இந்த யாத்திரையால் சமூக நல்லிணக்கத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

இயற்கையோடு பயணிக்கும் இந்த யாத்திரை உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமிக்கது இந்த யாத்திரையின் பயனாக பல நேர்த்திக் கடன்கள் நிறைவேறியும் நோய்கள் குணமாகியுள்ளது.

நாடு தற்போது சுமூகநிலைக்கு வந்துள்ளது எனவே சுகாதார பணிமனைகள் எங்களுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்கினால் சமூக இடைவெளியைப் பேணி நாங்கள் யாத்திரையை முன்னெடுத்துச் செல்ல இயலும் எனவே இந்த வருடம் பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ள அடியாராகிய நாங்கள் தயார் நிலையிலுள்ளோம் இருந்த போதும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக யாத்திரை மேற்கொள் சந்தர்ப்பம் கிடைக்குமா? என்ற நிலையிலுள்ளோம்

இருந்த போதும் இந்த யாத்திரைப் பயணம் தடைப்படுமாயின் யாத்திரைகளாகிய எங்களுக்கு உளவியல் ரீதியான மன பின்னடைவு ஏற்படும். இருந்தாலும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம் எனவே இந்த பாதையாத்திரைக்கு ஜனாதிபதி அனுமதியளிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.