“சதிகாரர்களின் சதிமுயற்சிக்குப் பின்னால் தமிழர்கள் செல்வோமானால், அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டி நேரிடும்.” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்அம்பாறை மாவட்ட வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழர்களின் வாக்கு வங்கியானது மூன்றாம் நிலையில் இருக்கின்றது. இந்தநிலையில், பலர் தேசியக் கட்சிகளின் சலுகைகளுக்கும் பணத்துக்கும் உள்வாங்கப்பட்டு, தமிழர்களின் வாக்குகளைக் கூறுபோடும் சதிவேலைகளில் இறங்கியுள்ளனர்.
அவ்வாறானவர்களுக்கு எமது மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” – என்றார்.