கிட்டங்கி பாலத்தை சீராக அமைத்து கொடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றினை தயாரித்து சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் 28 வது மாதாந்த அமர்வு இன்று நாவிதன்வெளி பிரதேச கூட்ட மண்டபத்தில் காலை 10 மணிக்கு பதில் தவிசாளர் ஏ. கே அப்துல் சமட் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த மாத கூட்டறிக்கை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இதனை தொடர்ந்து பிரதேசத்தில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.