அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன இனிமேல் சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தபால் தொழிற்சங்க ஊழியர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.