நாட்டின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த காரியாலயத்தின் அதிகாரிகள் குழுவுக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவியல் திணைக்களத்தினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விசாரணைகளுக்கு அமைவாக குற்றம் சாட்டப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பிரதி காவல் துறை ஆய்வாளர் ஒருவர் உள்ளிட்ட (05) நபர்ளின் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.