நாட்டின் மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்களுக்கான வேதனம் வழங்கும் நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் மத்திய கலாசார நிதியம் பெறும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக மாதாந்தம் (135) மில்லியன் ரூபாய் விகிதம் திறைசேரி மானியத்தை பெற்றுககொள்வதற்கான கோரிக்கை ஒன்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.