சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கையில் (15) நபர்கள் கைது!

1510037185arrest1 3
1510037185arrest1 3

நாட்டின் திருகோணமலை துறைமுகத்திற்கு அப்பால் நோர்வே மற்றும் எலிசபெத் தீவுகளுக்கு அருகில் சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த (15) நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியினை சேர்ந்தவர்களே இன்றைய (05) தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து டிங்கி படகுகள் இரண்டும், (126) கிலோ கிராம் மீன் தொகை உள்ளிட்ட மீன்பிடி பொருட்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்களில் (09) பேரிடம் கடற்றொழிலுக்கான உரிய அனுமதி பத்திரம் இல்லை எனவும் ஏனைய (06) பேரும் தடை செய்யப்பட்டுள்ள வலைகளை பயன்படுத்தியுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.