4 துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் கைது

kaithu

ஹினிதும -வீரபொத்த கிழக்கு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் இன்றைய தினம் உடுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்