புதிய கொரோனா பரவினால் நிலைமை மிகவும் ஆபத்தானதாக இருக்கும்!

9 1
9 1

புதிய கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவினால், நிலைமை மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதுடன் தற்போது உயிருடன் உள்ள சிலரை காண்பதும் அரிது என எச்சரிக்கை விடுத்துள்ளார் தொற்றுநோயியல் தலைமை நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர.

இன்றையதினம் (14) ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், வெலிசற கடற்படைத் தளத்தில் கடற்படை வீரர்களுக்கு தொற்றிய கொரேனாவை கட்டுப்படுத்த நாடு மூடப்பட்டிருந்தாலும்,தற்போது கந்தகாடு புனர்வாழ்வு மையம் மூலம் நோய்த் தொற்று திறக்கப்படுவதால் எழுந்துள்ள நிலைமை குறித்து மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.

“கந்தகாடு மறுவாழ்வு மையத்தின் நிலைமை காரணமாக, அங்கிருந்து விடுப்பில் வீட்டிற்குச் சென்ற ஊழியர்கள் பள்ளிகள் மற்றும் கூட்டங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்கள் நண்பர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வைரஸ் எளிதில் பரவுகிறது. இதுவரை சமுதாயத்தில் பரவிய கொரோனா நோயாளிகள் ராஜாங்கனை உள்ளிட்ட 06 பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளனர்.