தலைவிரித்தாடுகின்றது ‘மொட்டு’வின் வன்முறை இதுவரை 259 முறைப்பாடுகள் பதிவு

Untitled 3

தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிராகவே அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை தமக்குக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்த விபரங்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜ முன்னணிக்கு எதிராக 259 முறைப்பாடுகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 98 முறைப்பாடுகளும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக 38 முறைப்பாடுகளும், இலங்கைத்  தமிழரசுக் கட்சிக்கு எதிராக 20 முறைப்பாடுகளும், ஈ.பி.டி.பிக்கு எதிராக 12 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

சட்டவிரோத பிரசாரம் குறித்தே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம், சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகள் குறித்தும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.