கைது செய்யப்படுவதனை ரத்து செய்யுமாறு கோரி ஏவல் மனு தாக்கல்!

9409 2015121445 3
9409 2015121445 3

தான் கைது செய்யப்படுவதனை ரத்து செய்யுமாறு கோரி ஏவல் மனு தாக்கல் செய்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீர் கொழும்பு சிறைச்சாலயின் கண்காணிப்பாளர் அனுருந்த சம்பாயோ சற்று முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் சிறைச்சாலை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 04 பேரை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இதனை தொடர்ந்து அனுருந்த சம்பாயோவினால் ஏவல் மனு ஒன்றும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்துள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றம் அந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.