கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசபுரம் காட்டில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லும் போது வில்லடி பகுதியில் வைத்து பூநகரி பொலீசாரால் குறித்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளது.
பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பூநகரி பொலிசார் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட மரக்குற்றிகளின் பெறுமதி 8 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.