நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நான்கு பேரும் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் 242 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் 49 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,875 என்பது குறிப்பிடத்தக்கது.