காவல்துறை திணைக்கள பிரிவுகளுக்கு இடயேயான போட்டிகளின் காரணமாக சஹரான் ஹஷீம் தொடர்பிலான பல்வேறு தகவல்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் குறித்த ஆணைக்குழுவில் இன்று சாட்சியம் வழங்கியபோதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.