கொழும்பின் பல பகுதிகளிலும் நாளை காலை 08 மணி முதல் 09 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு 13 14 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தடன், கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளக்கு குறை அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.