உடனடியாக திருந்துங்கள் – முன்னணியை எச்சரிக்கும் ஆய்வாளர் ஜோதிலிங்கம்

tnpfj
tnpfj

மணிவண்ணன் வெளியேற்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறிழைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட திரு மணிவண்ணன் அவர்கள்மீது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்தது தொடர்பாக முகநூலில் எழுதிய பதிவொன்றில்,

“மணிவண்ணன் வெளியேற்றம் கட்சியின்
1)அரசியல் மூலோபாயத்தவறு
2)அரசியல் தந்திரோபாயத்தவறு
3)கட்சியின் ஒழுக்க நெறிமுறைத்தவறு
4)சமூக தார்மீக அறநெறித்தவறு
இந்தத் தவறுகளை உடனடியாகத் திருத்தாவிட்டால் முன்னணியை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

jothilingam

அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் நீண்டகாலமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளராக செயற்பட்டதுடன் , நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படையாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.