தாயகம் திரும்பிய 730 பேர்!

SLairlines 1
SLairlines 1

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 730 இலங்கையர்கள் இன்று (20) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதனடிப்படைப்படையில் டோஹா கட்டாரில் இருந்து 20 பேரும் குவைட்டில் இருந்து 160 பேரும் வருகை தந்துள்ளனர்.

அத்துடன் சென்னையில் இருந்து 290 பேரும் டுபாயில் இருந்து 260 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.