கொரோனா வைரஸ் தொற்றினால் 100 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்ள நேரிடுமென உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வொஷிங்டனை தளமாகக் கொண்ட உலக வங்கி முன்பு 60 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் சிக்கிவிடுவார்கள் என தெரிவித்த நிலையில், புதிய மதிப்பீட்டின் படி 70 முதல் 100 மில்லியன் மக்கள் வறுமையை எதிர்கொள்ள நேரிடுமென உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றுநோய் மோசமடைந்துவிட்டால் அந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
கடன் கொடுப்பனவுகளை நிறுத்தி வைப்பதற்கான உறுதிப்பாட்டைத் தாண்டி, ஏழை நாடுகள் வைத்திருக்கும் கடனின் அளவை கடனாளிகள் குறைப்பது அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.