சிறிய மீன்பிடி படகு மூலம் கோட்டேகொட பிரதேசத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு நபர்கள் காணாமல் போயுள்ளனர்.
குறித்த இருவரையும் தேடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்தவொரு தகவலும் இல்லையென மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு காணாமல் போன நபர்கள் இருவரும் கோட்டேகொட பகுதியில் வசித்து வருபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.