பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.