வவுனியாவில் யுத்தம் காரணமாக கணவனை இழந்த ஐந்து பெண் தலைமை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .
சர்வமத சமாதான பெண்கள் அமைப்பின் நிதி அனுசரணையில் வீரபுரம் , பாவற்குளம், பூந்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கணவனை இழந்த ஐந்து பெண்தலைமை குடும்பங்களுக்கு இருபது கோழிக்குஞ்சுகள் அதற்குரிய உபகரணங்கள் என்பனவும் இன்று மாலை அவ் அமைப்பின் பிரதிநிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.