வவுனியாவில் பாதசாரி கடவை அமைக்குமாறு கோரிக்கை!

IMG cf7edae347dd0d50fd613fbea7616dd6 V
IMG cf7edae347dd0d50fd613fbea7616dd6 V

வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக பாதசாரிக்கடவை இன்றி தினமும் விபத்துக்கள் இடம்பெறுகின்றன. எனவே இவ் விபத்தை தடுப்பதற்கு சமுர்த்தி வங்கிக்கு முன்பாக பாதசாரிக்கடவை அமைத்துத்தருமாறு சமுர்த்தி பயனாளர்கள் தெரிவிக்கின்றனர் .

வவுனியா மன்னார் பிரதான வீதியிலுள்ள சமுர்த்தி வங்கிக்கு கணேசபுரம் , கூமாங்குளம் , ஈச்சங்குளம், வைரவப்புளியங்குளத்தை உள்ளடக்கிய 16 கிராம அலுவலகர் பிரிவுகளிலுள்ள சமுர்த்திப்பயனாளர்கள் தினமும் 150 பேர் வந்து செல்கின்றனர் .

பிரதான வீதியைக்கடந்து வங்கிக்குச் செல்ல முற்படும்போது முச்சந்தியிலிருந்து மூன்று திசைகளிலிருந்து வரும் வாகனங்களுடன் மோதி பலர் தினமும் காயமடைந்து வருகின்றனர் .

நேற்று இப்பகுதியில் இரு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது. எனவே இதனை கருத்திற்கொண்டு பயனாளர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் இப்பகுதியில் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக பாதசாரிக்கடவை ஒன்றினை அமைத்துத்தருமாறு சமுர்த்தி பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .