சிறையில் அடைக்கப்பட்டுள்ள ´களுபே அமித்´ என்ற அமித் சஞ்சீவவிற்கு சொந்தமான மூன்று துப்பாக்கிகள் மீடியாகொடை பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.