வாகரையில் சிறுமுயற்சியாளர்களுக்கான கடைகள் மக்களிடம் கையளிப்பு

vaharai
vaharai

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் சிறுமுயற்சியாளர்களுக்கான வீதியோர விற்பனை நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரினால் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வட்டவான் மாங்கேனி ,பனிச்சங்கேனி ,காயங்கேனி போன்ற இடங்களில் 40கடைகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்துவைக்கப்பட்டது.

வேல்ட்விஷன் லங்கா நிறுவனத்தின் முகாமையாளர் இ.பிரகாஷ்குமார் அவர்களின் நிதி உதவியுடன் 40 கடைத்தெருக்கள் மக்களிடம் திறந்து கையளிக்கப்பட்டது.

அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் அபிவிருத்தி என்பது ஒவ்வொரு தனி நபர்களின் வளர்ச்சியில் தான் தங்கியுள்ளது. அந்த வகையில் தங்களின் பிரதேசங்களின் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு தனியான சந்தை இருக்கின்றது. அந்தவகையில் உங்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை நீங்களாகவே விற்பனை செய்து இலாபத்தினை பெற்று நீங்கள் எல்லோரும் பயனடைய வேண்டும் என வேண்டிக்கொண்டார்.