20வது திருத்தத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் இணைந்து பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளன என எதிர்கட்சி அறிவித்துள்ளது .
நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார்.
மாதுளவாவே சோபித தேரரின் சிலைக்கு முன்னாள் உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சி 20வது திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஓக்டோபர் ஐந்தாம் திகதி நாடாளவியரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் கறுப்புகொடி ஏற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.