சீனாவின் உயர் மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ இந்த மாத இறுதியில் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கைக்கான முந்தைய பயணத்தை ஒத்தி வைத்த மைக் பொம்பியோ, ஒக்டோபர் 27 ஆம் திகதி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின்போது முடக்கல் நிலையில் உள்ள 480 மில்லியன் அமெரிக்க டொலர் மில்லினியம் சேலஞ்ச் கோர்ப்பரேஷன் (எம்.சி.சி) ஒப்பந்தம் குறித்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.