தெஹிவளை கரகம்பிட்டிய சந்தையில் மீன் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இரத்மலானை, சதுன்கம செஞ்சிலுவை சங்க வீடமைப்பு திட்டத்தில் வசிக்கும் 63 வயதான பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவர், காய்ச்சல் காரணமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவருடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.