மட்டக்களப்பு-கரடியனாறு-கித்துள் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மணல் மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இலுப்படிச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் தனது வீட்டு வறுமை காரணமாக மணல் அகழ்வு தொழில் புரிந்து வந்துள்ளார். வழமைபோல் இன்றும் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது குறித்த இளைஞன் மேல் மண்மேடு இடிந்து விழுந்துள்ளது. இதனை கண்டறிந்த பிரதேச வாசிகள் சுமார் அரை மணி நேரத்தின் பின் இளைஞனை மீட்டு கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் போதே இளைஞன் உயிரிழந்துள்ளார்.