களுத்துறை மற்றும் பாணந்துறை ஆகிய நீதிமன்றங்களின் வழக்கு நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ள வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச வழக்கறிஞர் ஒருவரை சந்தித்திருந்த பேலியகொடை மீன்சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை களுத்துறை மற்றும் பாணந்துறை நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்குமாறு வழக்கறிஞர்கள் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கல்கிஸ்ஸை நீதிமன்ற நடவடிக்கைகளை ஒருவார காலத்துக்கு தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.