பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் கலகொட அத்தே ஞானசார தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இலங்கையில் கலாசார மேம்பாடு சம்பந்தமாகவும் அத்தோடு பொருளாதார மேம்பாட்டுக்காக பிற மதங்களுக்கு மாறிய மக்களை சொந்த மதத்திற்கு மீட்டெடுப்பதற்கான புதிய திட்டங்களை உருவாக்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்ட தாக தெரியவருகிறது.
இதேவேளை செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி அண்மையில் வழங்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.