உற்பத்தி செயற்பாடுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லத் தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திசெய்து. மின்னஞ்சல் ஊடாக அனுப்புவதன் மூலம் இதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்.

secratery@mws.gov.lk என்பது மின்னஞ்சல் முகவரியாகும். ஏற்றுமதி அபிவிருத்திச்சபை இலங்கை முதலீட்டுச் சபை என்பவற்றின் அங்கீகாரம்பெற்ற ஏற்றுமதி மற்றும் கடல் தொழில் உற்பத்திகளை முன்னெடுத்துச் செல்வது இதன் நோக்கமாகும்.

இதேவேளை, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் வலியுறுத்தினார்.