வாகரை கட்டுமுறிவு பகுதில் ஊள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வாகரை காவல்துறை பிரிவிலுள்ள கதிரவெளி கட்டுமுறிவு பகுதியில் உள்ளூர் துப்பாக்யுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று குறித்த வீட்டை  சுற்றிவளைத்து சோதனை செய்தபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன் ஒருவரை கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.