கிளிநொச்சியில் இன்று பற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த ஏ9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கி ஒரேதிசையில் பயணித்த டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகின.
டிப்பர் வாகனம் சடுதியாக பிரேக் அடித்தமையால் அதே திசையில் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி டிப்பரின் பின்பகுயில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
பூநகரியிலிருந்து கிளிநொச்சியிலுள்ள தனது வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்த வேளையில் இன்று (08.11.2020) இரவு 6.30 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் காயமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.