ஆப்கானிஸ்தானில் பாக்லான் மாகாணத்தில் இன்று தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 4 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதலில் மாவட்ட காவல்துறை தலைவர் உட்பட 4 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டு வட பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.