அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி விடைபெறுகிறார்

rangan kokai
rangan kokai

இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயற்பட்ட ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (Nov.17) நிறைவடைகிறது.

உச்சநீதிமன்ற வளாகத்தில் ரஞ்சன் கோகாய்க்கு இன்று பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள சரத் அரவிந்த் பாப்டே மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாயை வழியனுப்பி வைத்தனர்.

இவர் தனது பதவி காலத்தில் அயோத்தியா, ரபேல், சபரிமலை விவகாரம் உள்ளிட்ட மிகவும் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.