ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை, கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளுமாறு, அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த தினம் கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எனினும் இதன்போது இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.