நாட்டில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 335 கொரோனா நோயாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 16,978 ஆக அதிகரித்துள்ளது.