ஜனாதிபதி தோ்தல் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாளை மாலை ஜனாதிபதி யார் என்பது அறிவிக்கப்படும் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணி இன்று நள்ளிரவுக்கு முன் ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நாளைமறுதினம் திங்கட்கிழமை காலையில் புதிய ஜனாதிபதிபதவி ஏற்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.