இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டம் இன்று தொடங்க இருந்த நிலையில் இந்தியா தனது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.
அதன்படி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 343 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த நிலையில், 213 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
வங்காளதேச அணி சார்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா ஒரு விக்கட்டினையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆட்டநாயகனாக மயாங் கர்வால் தெரிவு செய்யப்பட்டார்
அடுத்த போட்டி எதிர்வரும் 22ம் திகதி தொடரின் 2வது போட்டியில் சந்திக்கிறது. இப்போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.