இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 4 ஆண்களும், 4 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.