தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் மீது தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக சந்திரசேகரன் ராஜன் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் பணம் வாங்கியதாக தெரிவித்து தன்னை தாக்க முற்றட்டதாக தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6 மணியளவில் தனது தொழில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய ராஜனை தாக்க முற்பட்ட வேளை வீட்டின் முன்கதவு பூட்டியிருந்த நிலையில் பின்புறமாக தப்பித்து தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். கதவைத் திறக்காதமையால் அவர்கள் ஆத்திரத்தில் கோடரியால் கதவை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளார்கள். அவ்வாறு தாக்கியவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஆதரவாளர்கள் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.