குடும்பத்துடன் சேர்ந்த பிருத்விராஜ்

i3 23 1
i3 23 1

‘ஆடுஜீவிதம்’ படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்ற நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த 58 பேர் கொரோனா பிரச்னை காரணமாக அங்கு சிக்கிக் கொண்டனர்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு கடந்த மே 22ம் திகதி சிறப்பு விமானம் மூலம் பிருத்விராஜும், படக்குழுவினரும் இந்தியா திரும்பினர். அவர்கள் அனைவரும் கொச்சியில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து நடிகர் பிருத்விராஜுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என முடிவு வந்தது. இதனால் அவர் சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.

பிருத்விராஜை பார்த்ததும் மனைவியும், மகளும் அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த மகிழ்ச்சியான தருணத்தை செல்பி எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் பிருத்விராஜ். “மீண்டும் சேர்ந்தாச்சு”, என அவர் அந்த புகைப்படத்துக்கு கருத்து கொடுத்துள்ளார்.