‘பொங்கல் பானை’ – கட்சி சின்னத்தை அறிவித்தார் விக்னேஸ்வரன்!

IMG 20200111 WA0004
IMG 20200111 WA0004

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் சின்னத்தை அறிவித்துள்ளார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

பொங்கல் பானையின் பொங்கல் வாழ்த்துக்கள்‘ என்று தலைப்பிட்டு அனுப்பிய பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தனது கட்சியின் சின்னத்தை வெளிப்படுத்தியுள்ளார் நீதியரசர் விக்னேஸ்வரன்.

அந்த வாழ்த்து செய்தி வருமாறு,

” உலகம் வாழ் எனது இனிய தமிழ் உறவுகளுக்கு பொங்கல் பானை சார்பில் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை உழவர் திருநாளாம் இன்று மதம், குலம், நாடு கடந்து சகல தமிழ்ப் பேசும் உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
அன்புடன்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி”