குணமடைந்தோர் 91 ஆக அதிகரிப்பு – 156 பேர் சிகிச்சையில்

4 ages 2
4 ages 2

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் ஐவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனாவின் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 254 ஆகக் காணப்படுகின்றது. அவர்களில் 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 156 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 122 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.