ஊரடங்கு நேரத்தில் மாற்றம்

curfew colombo
curfew colombo

நாடு முழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தொடர்பான ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றிரவு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இதுவரைக்காலமும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது. நேற்றும், நேற்று முன்தினமும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கான அனுமதியில் மாற்றங்கள் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.