கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் இருநூறு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

03 1
03 1

கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.

நேற்று மாலை 4 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தில் திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டது. கேகாலைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட அவர்கள் தீயணைக்கும் பணிகளை முன்னெடுத்தனர்.

இதன்போது கண்டி மற்றும் மாவனெல்ல தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த நிலையில் சுமார் 4 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீப்பரவல் காரணமாக சுமார் 200 வர்த்தக நிலையங்கள் வரை முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளன.

மின் கசிவின் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனப் கேகாலைப் பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

இதனால் குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. தீயணைப்புப் படையினருடன் இணைந்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் தீயணைப்புப் பணிகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கேகாலைப் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.