பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் அரசியல் செயலாளர் சிவோன் லெதன் ஆகியோர் மாவட்ட அரசாங்கம் அதிபர் க.மகேசனை இன்று 02.07.2020 சந்தித்து கலந்துரையாடினர்.
வடக்கில் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அரச மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், கொரோனா இடர் நிலைமையின் போது யாழ்ப்பாணத்தில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது மற்றும் தற்போதைய யாழ்ப்பாண நிலவரம் தொடர்பாகவும் கேட்டறிந்த துணைத்தூதுவர். யாழ்ப்பணத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்தார். மேலும், எதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு தங்களாலான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.